என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலையூரில் அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்2 Sep 2018 11:32 PM GMT (Updated: 2 Sep 2018 11:32 PM GMT)
சேலையூரில், அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த சேலையூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பிரபு (வயது 54). இவருடைய மனைவி மைதிலி. கணவன்-மனைவி இருவரும் அரசு அலுவலகத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஒருவருக்கு திருமணம் ஆகி தனியாக வசித்துவருகிறார். இளைய மகன் மாடம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். அவர்களது மகன் பள்ளிக்கு சென்றுவிட்டார்.
வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்த அவர்கள், படுக்கை அறையில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 20 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சேலையூர் போலீசில் பிரபு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வீட்டின் பூட்டு, பீரோ கதவு உடைக்கப்படாமல் நகைகள் மாயமாகி இருப்பதால் அடிக்கடி அவர்களது வீட்டுக்கு வந்துசெல்லும் நன்கு தெரிந்த நபர்கள்தான் அவற்றை திருடிச்சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த சேலையூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பிரபு (வயது 54). இவருடைய மனைவி மைதிலி. கணவன்-மனைவி இருவரும் அரசு அலுவலகத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஒருவருக்கு திருமணம் ஆகி தனியாக வசித்துவருகிறார். இளைய மகன் மாடம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். அவர்களது மகன் பள்ளிக்கு சென்றுவிட்டார்.
வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்த அவர்கள், படுக்கை அறையில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 20 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சேலையூர் போலீசில் பிரபு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வீட்டின் பூட்டு, பீரோ கதவு உடைக்கப்படாமல் நகைகள் மாயமாகி இருப்பதால் அடிக்கடி அவர்களது வீட்டுக்கு வந்துசெல்லும் நன்கு தெரிந்த நபர்கள்தான் அவற்றை திருடிச்சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X