search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நச்சலூர் பகுதியில் மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்
    X

    நச்சலூர் பகுதியில் மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

    நச்சலூர் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
    நச்சலூர்:

    நச்சலூர் பகுதியில் சிலர் மண் கடத்துவதாக வருவாய் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து நங்கவரம் வருவாய் ஆய்வாளர் கணேசமூர்த்தி, நச்சலூர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் சோதனை நடத்தினர்.

    அப்போது கள்ளை ஆற்று வாரியில் டிராக்டரில் மண் அள்ளி கடத்தி கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து மண் கடத்திய டிராக்டரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். பின்னர் விசாரணையில், மண் கடத்தியது டிராக்டரை ஓட்டிவந்த நச்சலூர் அருகே உள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்த அங்கப்பன் மகன் வினோத்குமார்(வயது 27) என தெரியவந்தது. பின்னர் டிராக்டரை பறிமுதல் செய்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 
    Next Story
    ×