search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆவடியில் விஞ்ஞானி-அதிகாரி வீட்டில் கொள்ளை
    X

    ஆவடியில் விஞ்ஞானி-அதிகாரி வீட்டில் கொள்ளை

    ஆவடியில் விஞ்ஞானி-அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

    திருநின்றவூர்:

    ஆவடி, இம்மானுவேல் தெருவில் வசித்து வருபவர் ராமலிங்கய்யா. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி துறையில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் இன்று காலை ராமலிங்கய்யாவின் வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

    இதேபோல் அருகில் உள்ள ஓய்வுபெற்ற பாதுகாப்புத்துறை அதிகாரி மீனாட்சி நாதன் என்பவரின் வீட்டுக்கதவும் உடைக்கப்பட்டு இருந்தது. அவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று இருந்தார்.

    அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எவ்வளவு நகை, பணம் கொள்ளைபோனது என்று உடனடியாக தெரிய வில்லை.

    இதுகுறித்து வெளியூரில் உள்ள ராமலிங்கய்யாவுக்கும், மீனாட்சி நாதனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வந்த பின்னரே எவ்வளவு நகை-பணம் கொள்ளைபோனது என்பது தெரியவரும்.

    வீடுகளில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மகும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். இது குறித்து ஆவடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×