என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புளியந்தோப்பில் கூலி தொழிலாளி அடித்து கொலை - எலக்ட்ரீசியன் கைது
பெரம்பூர்:
புளியந்தோப்பு ஆசீர்வாதபுரத்தை சேர்ந்தவர் சென்னையன் (38). கூலி தொழிலாளி.
இவர் ஆசீர்வாதபுரம் சத்துணவு கூடத்தில் உட்கார்ந்து இருந்தார். அந்த வழியாக லோகநாதன் (54) என்பவர் வந்து கொண்டிருந்தார். இவர் எலக்ட்ரீசியன்.
அப்போது குடிபோதையில் இருந்த சென்னையன், கையில் இருந்த பாட்டிலை லோகநாதன் மீது வீசி எறிந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த லோகநாதன் செங்கல் ஒன்றை எடுத்து சென்னையனை அடித்தார். இதில் அவர் தலையில் காயம் ஏற்பட்டு கீழே சாய்ந்தார்.
அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சென்னையன் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் பேசின் பிரிட்ஜ் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கொலைக்கு காரணமான எலக்ட்ரீசியன் லோகநாதன் கைது செய்யப்பட்டார்.
மேலும் விசாரணை நடந்து வருகிறது. குடிபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்