search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளியந்தோப்பில் கூலி தொழிலாளி அடித்து கொலை - எலக்ட்ரீசியன் கைது
    X

    புளியந்தோப்பில் கூலி தொழிலாளி அடித்து கொலை - எலக்ட்ரீசியன் கைது

    புளியந்தோப்பில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரம்பூர்:

    புளியந்தோப்பு ஆசீர்வாதபுரத்தை சேர்ந்தவர் சென்னையன் (38). கூலி தொழிலாளி.

    இவர் ஆசீர்வாதபுரம் சத்துணவு கூடத்தில் உட்கார்ந்து இருந்தார். அந்த வழியாக லோகநாதன் (54) என்பவர் வந்து கொண்டிருந்தார். இவர் எலக்ட்ரீசியன்.

    அப்போது குடிபோதையில் இருந்த சென்னையன், கையில் இருந்த பாட்டிலை லோகநாதன் மீது வீசி எறிந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த லோகநாதன் செங்கல் ஒன்றை எடுத்து சென்னையனை அடித்தார். இதில் அவர் தலையில் காயம் ஏற்பட்டு கீழே சாய்ந்தார்.

    அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சென்னையன் பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்ததும் பேசின் பிரிட்ஜ் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கொலைக்கு காரணமான எலக்ட்ரீசியன் லோகநாதன் கைது செய்யப்பட்டார்.

    மேலும் விசாரணை நடந்து வருகிறது. குடிபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    Next Story
    ×