search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுமுடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
    X

    கொடுமுடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

    கொடுமுடி அருகே நடந்து சென்ற வாலிபர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே பாசூர் அடுத்த வேங்கியாம் பாளையம் கிராமத்தை சேர்ந்த வரதன். இவரது மகன் வீராசாமி (28). இவருக்கு இன்னும் திருமண மாகவில்லை. கூலி வேலை செய்து வருகிறார்.

    வீராசாமி பாசூரில் இருந்து சோளங்கா பாளையம் செல்லும் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் 108 ஆம்பு லன்சு மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வீராசாமியை பரிசோதணை செய்த டாக்டர்கள் வீராசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து மலையம் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ மாணிக்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×