search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ரே‌ஷன் கடை ஊழியர் பலி
    X

    பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ரே‌ஷன் கடை ஊழியர் பலி

    பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ரேஷன் கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த கீரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (32).

    இவர் ஆலாரு கிராமத்தில் உள்ள ரே‌ஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை பணி முடிந்து வீடு திரும்ப புறப்பட்டார்.

    அப்போது அவருடைய நண்பர் மகேஷ் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தார். அதில் சுபாஷ் ஏறிக் கொண்டார். இருவரும் கீரப்பாக்கம் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

    போளூர் அருகே உள்ள ஓரி காலனியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் மோட்டர் சைக்கிளில் சென்றவர் கைகாட்டாமல் திடீர் என்று திரும்பினார்.

    அப்போது, மகேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மகேசும், பின்னால் உட்கார்ந்து இருந்த ரே‌ஷன் கடை ஊழியர் சுபாசும் கீழே விழுந்தனர். இதில் மகேஷ் லேசான காயத்துடன் தப்பினார்.

    சுபாஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காலும் முறிந்தது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்த ரே‌ஷன் கடை ஊழியர் சுபாசுக்கு மனைவியும், 3 வயதில் ஒரு மகனும், 6 மாதத்தில் ஒரு மகனும் உள்ளனர்.

    விபத்து குறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×