search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்
    X

    தேனி அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்

    தேனி அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பெண் மாயமாகினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே சின்னமனூர் ஓடைப்பட்டி ராயல்குளம் தெருவை சேர்ந்தவர் பால்கண்ணன் மகள் கிருஷ்ணஹர்சினி(வயது20). தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி 2-ம் வருடம் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற கிருஷ்ணஹர்சினி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தார். எங்கும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் மணிபாரதி என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் சுங்கச்சாவடி தெருவை சேர்ந்தவர் முகமதுரபீக் மகள் ஆப்ரீன்பவுமிதா(25). என்ஜீனியரிங் பட்டதாரி. வீட்டிலிருந்த ஆப்ரீன்பவுதிமா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    அந்த புகாரில் தினேஷ் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×