search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரத்தநாடு அருகே பாதை தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
    X

    ஒரத்தநாடு அருகே பாதை தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

    ஒரத்தநாடு அருகே பாதை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்டார். இது குறித்து கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் தெற்கு ஆதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளைசாமி. இவரது மகன் கண்ணன் (36), வெள்ளைச்சாமி குடும்பத்தினருக்கும், அதே பகுதியில் உள்ள செல்வம் குடும்பத்தினருக்கும் பாதை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த கண்ணன் கடந்த சிலநாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளைச்சாமி குடும்பத்தினருக்கும், செல்வம் குடும்பத்தினருக்கும் இடையே பாதை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. நேற்று தனியாக சென்ற கண்ணனை செல்வம், அவரது மனைவி வளர்மதி, இவர்களின் மகன் ராஜா ஆகியோர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயமடைந்த கண்ணன் ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை தாக்கிய கணவன்-மனைவி உள்பட 3 பேரை தேடி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×