search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்களும் அரசியலில் தவறாமல் பங்கு கொள்ள வேண்டும் - கமல்ஹாசன்
    X

    பெண்களும் அரசியலில் தவறாமல் பங்கு கொள்ள வேண்டும் - கமல்ஹாசன்

    சென்னையில் நடைபெற்ற பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கமல்ஹாசன் அரசியலில் பெண்களும் தவறாமல் பங்கு கொள்ள வேண்டும் என தெரிவித்தார். #KamalHaasan
    சென்னை :

    சென்னை ஆழ்வார்பேட்டையில் பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு விருதுகளை வழங்கி அவர் கவுரவித்தார். 


    பின்னர் பேசிய அவர், அரசியல் எனும் சாக்கடையை சுத்தம் செய்ய அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலைக் கண்டு ஒதுங்கி நிற்காமல், பெண்களும் அரசியலில் தவறாமல் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து, விழா மேடையில் நடிகர் பார்த்திபன் எழுப்பிய கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். முதலமைச்சரானால் உங்களுடைய முதல் கையெழுத்து எதற்கு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தற்போதைய லோக்பால் சட்டம் வெறும் கண் துடைப்பாகவே உள்ளது. 

    எனவே, நான் முதல்வராக ஆனால் மீண்டும் லோக்பால் சட்டத்தை வலிமையாக்கவே முதல் கையெழுத்து போடுவேன் என்றும் வேறு யார் முதல்வரானாலும் லோக்பால் சட்டத்தை வலிமையாக்க முதல் கையெழுத்திட வைப்பேன் என்றும் கமல் தெரிவித்தார். #KamalHaasan
    Next Story
    ×