search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்தியூரில் இன்று காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல்
    X

    அந்தியூரில் இன்று காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல்

    அந்தியூரில் இன்று காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் 7-வது வார்டில் உள்ள சிவசக்தி நகரில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக குடிநீர் வரவில்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் இன்று காலை திடீரென அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலிகுடங்களுடன் பெண்கள் நடுரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். மறியல் நடத்திய பெண்ணிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் வில்லியம் ஏசுதாசும் அங்கு வந்தார்.

    “வெள்ளம் காரணமாக பம்ப்பிங் தொட்டி (கிணறு) பகுதியில் சேறும் சகதியும் அடைத்து உள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இவை சரிசெய்யப்பட்டு விரைவில் குடிநீர் வழங்கப்படும்” என்று வில்லியம் ஏசுதாஸ் கூறினார். இதையொட்டி பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×