search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரியில் கியாஸ் சிலிண்டர் திருடியவர் கைது
    X

    கோத்தகிரியில் கியாஸ் சிலிண்டர் திருடியவர் கைது

    கோத்தகிரியில் கியாஸ் ஏஜென்சியில் இருந்து சிலிண்டரை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள கிருஷ்ணாபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 26). இவர் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் உள்ள ஒரு தனியார் கியாஸ் ஏஜென்சியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் பணியில் இருந்து நின்றுள்ளார். இவர் சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்கித்தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றதாகவும், ஆனால் கியாஸ் சிலிண்டர்களை வாங்கித்தராமல் ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கியாஸ் ஏஜென்சியில் இருந்து சிலிண்டர் காணாமல் போனதாக ஏஜென்சி மேலாளர் விஸ்வநாதன் கோத்தகிரி போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரஞ்சித்குமார் கியாஸ் ஏஜென்சியில் இருந்து சிலிண்டரை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு கியாஸ் சிலிண்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×