search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிவு
    X

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிவு

    நீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கி உள்ளது.
    கூடலூர்:

    கேரள மாநிலத்தில் கன மழை நீடித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்ததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்துள்ளது. எனவே நீர்வரத்து 1584 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 2206 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 139.70 அடியாக குறைந்துள்ளது.

    வைகை அணைக்கு 2271 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக 2271 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 69 அடியாக நீடிக்கிறது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 41.75 அடியாக உள்ளது. 2 கன அடி நீர் வருகிறது. 10 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 117.26 அடியாக உள்ளது. வருகிற 3 கனஅடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு பகுதியில் மட்டும் 20 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
    Next Story
    ×