search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியகுளம் அருகே சொத்து பிரச்சினையில் மகனை வெட்டி கொல்ல முயன்ற தந்தை
    X

    பெரியகுளம் அருகே சொத்து பிரச்சினையில் மகனை வெட்டி கொல்ல முயன்ற தந்தை

    பெரியகுளம் அருகே சொத்து பிரச்சினையில் மகனை வெட்டி கொல்ல முயன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 72). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். சொத்து காரணமாக மகன்களுக்கும், முனியசாமிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.

    முனியசாமியின் மகன் சண்முகசுந்தரம் அவரிடம் சொத்தை பிரித்து கொடுக்க கோரி தகராறில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென முனியசாமி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சண்முக சுந்தரத்தை வெட்டி கொலை செய்ய முயன்றார்.

    இதில் சண்முகசுந்தரத்தின் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    இது குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து முனியசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×