என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாளையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்- 402 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
Byமாலை மலர்25 Aug 2018 11:11 AM GMT (Updated: 25 Aug 2018 11:11 AM GMT)
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லை கிளை சார்பில் பாளையில் மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 402 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லை கிளை சார்பில் ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கான தடகளம், நீச்சல், டென்னிஸ், வாலிபால் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து ஆகஸ்ட்டு மாத விளையாட்டு போட்டிகள் நேற்று பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 402 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். போட்டியை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி தாளாளர் திருமாறன் தொடங்கி வைத்தார். தடகளப் போட்டியில் மாணவி கவிமதி, கார்த்திகா, கவுசல்யா ஆகியோர் வெற்றிபெற்றனர். பெண்களுக்கான வாலிபால் போட்டியில் குற்றாலம் பராசக்தி கல்லூரி அணி முதலிடமும், பாளை சாராள் தக்கர் கல்லூரி 2-வது இடமும் பெற்றன.
ஆண்களுக்கான டென்னிஸ் போட்டியில் கிறிஸ்துராஜா மாணவர் முதலிடமும், விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி, ஸ்ரீஜெயந்துர சரஸ்வதி ஸ்வாமிகள் பள்ளி மாணவர்கள் 2-வது இடம் பெற்றனர். நீச்சல் போட்டியில் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி முதலிடமும், சின்மயா பள்ளி 2-வது இடமும் பெற்றன.
பின்னர் மாலையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி சான்று, பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வீரபத்ரன், பயிற்சியாளர் சத்தியகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லை கிளை சார்பில் ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கான தடகளம், நீச்சல், டென்னிஸ், வாலிபால் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து ஆகஸ்ட்டு மாத விளையாட்டு போட்டிகள் நேற்று பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 402 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். போட்டியை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி தாளாளர் திருமாறன் தொடங்கி வைத்தார். தடகளப் போட்டியில் மாணவி கவிமதி, கார்த்திகா, கவுசல்யா ஆகியோர் வெற்றிபெற்றனர். பெண்களுக்கான வாலிபால் போட்டியில் குற்றாலம் பராசக்தி கல்லூரி அணி முதலிடமும், பாளை சாராள் தக்கர் கல்லூரி 2-வது இடமும் பெற்றன.
ஆண்களுக்கான டென்னிஸ் போட்டியில் கிறிஸ்துராஜா மாணவர் முதலிடமும், விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி, ஸ்ரீஜெயந்துர சரஸ்வதி ஸ்வாமிகள் பள்ளி மாணவர்கள் 2-வது இடம் பெற்றனர். நீச்சல் போட்டியில் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி முதலிடமும், சின்மயா பள்ளி 2-வது இடமும் பெற்றன.
பின்னர் மாலையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி சான்று, பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வீரபத்ரன், பயிற்சியாளர் சத்தியகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X