என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காளிகேசம் ரப்பர் தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்- தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம்
Byமாலை மலர்24 Aug 2018 4:16 PM GMT (Updated: 24 Aug 2018 4:16 PM GMT)
காளிகேசம் வனப்பகுதி ரப்பர் தோட்டத்தில் 4 யானைகள் கூட்டமாக நிற்பதை கண்ட தொழிலாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
நாகர்கோவில்:
பூதப்பாண்டியை அடுத்த கீரிப்பாறை, காளிகேசம் பகுதிகளில் ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளது. அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் ஏராளமான தொழிலாளிகள் பால் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். தினமும் அதிகாலை நேரத்தில் இவர்கள் பால் வெட்டும் தொழிலுக்கு செல்வது வழக்கம்.
இதுபோல நேற்று முன்தினமும் தொழிலாளிகள் ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றனர். தோட்டத்திற்கு சென்றபோது காளிகேசம் வனப்பகுதியில் 4 யானைகள் கூட்டமாக நிற்பதை தொழிலாளிகள் கண்டனர். அதைக்கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்த தொழிலாளிகள் இதுபற்றி ரப்பர் கழக அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
வனத்துறை ஊழியர்கள் காளிகேசம் பகுதிக்கு சென்று யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்றும் இதே பகுதிக்கு யானைகள் வந்தன. அவை கூட்டமாக நின்றன. இதைக்கண்ட தொழிலாளிகள் ரப்பர் தோட்டத்திற்கு செல்லாமல் கீழே இறங்கினர்.
காளிகேசம் மலைப்பகுதியில் அடிக்கடி யானைகள் கூட்டமாக ஊருக்குள் வருகிறது. அவைகள் பயிர் நிலங்களை சேதப்படுத்துவதோடு, உயிர் பயத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே இந்த பகுதியில் யானைகள் வராமல் தடுக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட வேண்டும் என்று தொழிலாளிகள் வேண்டு கோள்விடுத்தனர். கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென்றும் இல்லையேல் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X