search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்பம் அருகே தங்கையை தாக்கி தாயின் உடலை தூக்கி சென்ற விவசாயி
    X

    கம்பம் அருகே தங்கையை தாக்கி தாயின் உடலை தூக்கி சென்ற விவசாயி

    கம்பம் அருகே குடும்ப பிரச்சினையில் தங்கையை தாக்கி தாயின் உடலை தூக்கி சென்ற விவசாயி உள்பட அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த அழகர்சாமி மனைவி புஷ்பம் (வயது51). இவரது தாய் கருப்பாயி கடந்த 15 ஆண்டுகளாக இவரது பராமரிப்பிலேயே இருந்து வந்தார்.

    கடந்த 21-ந் தேதி கருப்பாயி இறந்து விட்டார். இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கருப்பாயி மகன் ராசு என்பவர் தனது தாய் உடலை எடுத்து சென்று தனது வீட்டில் இறுதி சடங்கு செய்ய வேண்டும் என கூறினார். அதற்கு புஷ்பம் இத்தனை நாட்கள் நான்தான் அவருக்கு எல்லா வி‌ஷயங்களையும் செய்து வந்தேன். எனவே இறுதி காரியத்தையும் நானே செய்து விடுகிறேன் என்றார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ராசு மற்றும் அவரது குடும்பத்தினர் புஷ்பத்தை தாக்கி கருப்பாயி உடலை எடுத்து சென்றனர். மேலும் வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தையும் அபகரித்து சென்றதாக புஷ்பம் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ராசு, மனைவி முருகேஸ்வரி, மகன்கள் சுரேந்தர், பிரசாத், மருமகள் உமா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×