என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கம்பம் அருகே தங்கையை தாக்கி தாயின் உடலை தூக்கி சென்ற விவசாயி
தேனி:
கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த அழகர்சாமி மனைவி புஷ்பம் (வயது51). இவரது தாய் கருப்பாயி கடந்த 15 ஆண்டுகளாக இவரது பராமரிப்பிலேயே இருந்து வந்தார்.
கடந்த 21-ந் தேதி கருப்பாயி இறந்து விட்டார். இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கருப்பாயி மகன் ராசு என்பவர் தனது தாய் உடலை எடுத்து சென்று தனது வீட்டில் இறுதி சடங்கு செய்ய வேண்டும் என கூறினார். அதற்கு புஷ்பம் இத்தனை நாட்கள் நான்தான் அவருக்கு எல்லா விஷயங்களையும் செய்து வந்தேன். எனவே இறுதி காரியத்தையும் நானே செய்து விடுகிறேன் என்றார்.
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ராசு மற்றும் அவரது குடும்பத்தினர் புஷ்பத்தை தாக்கி கருப்பாயி உடலை எடுத்து சென்றனர். மேலும் வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தையும் அபகரித்து சென்றதாக புஷ்பம் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ராசு, மனைவி முருகேஸ்வரி, மகன்கள் சுரேந்தர், பிரசாத், மருமகள் உமா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்