search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ஊழியர் தவறி விழுந்து படுகாயம்
    X

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ஊழியர் தவறி விழுந்து படுகாயம்

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பிளாட் பாரத்தின் மேற்கூரையை அகற்றும்போது ஊழியர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    ஆலுந்தூர்:

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் படிக்கட்டில் தொங்கியபடி ரெயில் பயணம் செய்த 5 பேர் விபத்தில் சிக்கி பலியானார்கள். இதற்கு காரணமான தடுப்பு சுவரை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

    அதற்கு சாத்தியம் இல்லாததால், விபத்தில் நடந்த பரங்கிமலை ரெயில் நிலைய 4-வது பிளாட் பாரத்தை 3 அடி தூரம் நகர்த்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்காக பிளாட் பாரத்தின் மேற்கூரையை அகற்றும் போது சுமேஷ் (30) என்ற ஊழியர் தவறிவிழுந்து படுகாயம் அடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    Next Story
    ×