search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஏர்போர்ட்டில் தனியார் நிறுவனத்தின் கார் பார்க்கிங் லைசென்ஸ் ரத்து
    X

    சென்னை ஏர்போர்ட்டில் தனியார் நிறுவனத்தின் கார் பார்க்கிங் லைசென்ஸ் ரத்து

    சென்னை விமான நிலையத்தில் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த கார் பார்க்கிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. #ChennaiAirport #AAI
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தை நிர்வகித்து, வாகனங்களிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கு எஸ்.எஸ். என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்கப்பட்டிருந்தது. இதற்காக ஆண்டிற்கு ரூ.200 கோடி என்ற அடிப்படையில் பார்க்கிங் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இந்த ஒப்பந்தம் போட்டு சுமார் ஓராண்டு ஆன நிலையில், ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்த நிறுவனம் போலியான வங்கி உத்தரவாதம் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பார்க்கிங் ஒப்பந்தத்தை இந்திய விமானநிலைய ஆணையம்  ரத்து செய்தது.

    இன்று நள்ளிரவு வரை மட்டுமே எஸ்.எஸ்.எண்டர்பிரைசஸ் நிறுவனம் பார்க்கிங் பகுதியை நிர்வகித்து கட்டணம் வசூலிக்க முடியும். அதன்பின்னர் பார்க்கிங் பகுதி இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்கு வரும்.



    விரைவில் புதிய டெண்டர் கோரப்பட்டு பார்க்கிங் ஒப்பந்தம் வழங்கப்படும். அதுவரை 3 மாதத்திற்கு குறுகியகால ஒப்பந்தம் போடவும் விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது.

    பார்க்கிங் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களை குறைப்பதற்காக விமான நிலைய ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக வெள்ளிக்கிழமை முதல் சாப்ட்வேர் மற்றும் பிற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கார்களுக்கு டோக்கன் வழங்க திட்டமிட்டுள்ளது. #ChennaiAirport #AAI
    Next Story
    ×