search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராலிமலை அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
    X

    விராலிமலை அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

    விராலிமலை அருகே அனுமதியின்றி மணல் கடத்திய இரண்டு லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    விராலிமலை:

    விராலிமலை ஆற்றுப்படுகைகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் ராசநாயக்கன்பட்டியில் உள்ள டோல் பிளாசா அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த லாரியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    அதன்பேரில், லாரியின் உரிமையாளரான கன்னியாகுமரி மாவட்டம் மருதகாட்டுவில்லையை சேர்ந்த ராஜசெல்வன்(வயது 29) மற்றும் லாரி டிரைவர் மார்த்தாண்டத்தை சேர்ந்த மணியன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். இதேபோல விராலிமலை தாசில்தார் பார்த்திபன், விராலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து விராலிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். 
    Next Story
    ×