search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரபாளையத்தில் ரூ.75 லட்சத்தில் புதிய பாலம்- அமைச்சர் தங்கமணி
    X

    குமாரபாளையத்தில் ரூ.75 லட்சத்தில் புதிய பாலம்- அமைச்சர் தங்கமணி

    குமாரபாளையத்தில் தரைவழி பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க ரூ.75 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள மொள்ளபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கோம்புப் பள்ளத்தின் வழியாக நீர் ஊருக்குள் புகுந்தது. இதன் காரணமாக பழைய பள்ளிபாளையம் ரோடு தரை பாலம் மூழ்கியது. இதனால் கடந்த ஒரு வாரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த தரைப் பாலத்திற்கு பதிலாக உயர்மட்டப் பாலம் அமைக்குமாறு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் அமைச்சர் தங்கமணி பார்வையிட்டார். பின்னர் தரைவழி பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க ரூ.75 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்தார். நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×