search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் அகில இந்திய வாலிபால் போட்டி- கீதாஜீவன் எம்எல்ஏ தொடங்கி வைக்கிறார்
    X

    தூத்துக்குடியில் அகில இந்திய வாலிபால் போட்டி- கீதாஜீவன் எம்எல்ஏ தொடங்கி வைக்கிறார்

    தூத்துக்குடியில் நாளை மறுநாள் அகில இந்திய வாலிபால் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியை கீதாஜீவன் எம்எல்ஏ தொடங்கி வைக்கிறார். #geethaJeevan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் 4-ம் ஆண்டு மணிராஜ் நினைவு கோப்பைக்கான அகில இந்திய அளவிலான பள்ளி மாணவ- மாணவிகள் பங்குபெறும் மின்னொளி கைப்பந்து போட்டி வருகிற 22-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது.

    தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் நடைபெறும் முதல் நாள் போட்டியை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, உஷா அங்கோ, பால கிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    இதையடுத்து 25-ந் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு சமத்துவ மக்கள் கழக மாநிலத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், நாம் இந்தியர் கட்சி நிறுவனத்தலைவர் ராஜா, முத்தையா குருமூர்த்தி, மாஸ்டர் மெர்வின் மணிராஜ் ஆகியோர் பரிசுகள் வழங்குகிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை மணிராஜ் நினைவு வாலிபால் கிளப் தலைவர் ராஜ்குமார், செயலாளர் ராஜசேகர், பொருளாளர் கணேசன் ஆகியோர் செய்து வருகின்றனர். #geethaJeevan
    Next Story
    ×