search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    திருப்பூரில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

    திருப்பூரில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையம் தோட்டத்து பாளையம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மனைவி ரத்தின லட்சுமி (25). பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தனது மகள் கனிஷ்காவுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். திருமுருகன் பூண்டி - பூலுவப்பட்டி சாலையில் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.

    அவர்கள் ரத்தினலட்சுமி மொபட் மீது மோதுவது போல் வந்தனர். இதனால் மொபட்டை நிறுத்தினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ரத்தின லட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். நகையை பறி கொடுத்த ரத்தினலட்சுமி சத்தம் போட்டார். ஆனால் அந்த சமயத்தில் அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் 3 பேரும் எளிதாக தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற 3 பேரை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×