search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலூரில் ஆசிரியையிடம் பணம் பறிப்பு - வாலிபர் கைது
    X

    மேலூரில் ஆசிரியையிடம் பணம் பறிப்பு - வாலிபர் கைது

    மேலூரில் ஆசிரியையிடம் பணம் பறித்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மேலூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுகுமாறன். இவரது மனைவி பாப்பா (வயது47). இவர் பட்டூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று வங்கிக்கு சென்ற பாப்பா அங்கு ரூ.15 ஆயிரம் எடுத்துள்ளார். பின்னர் அதனை கைப்பையில் வைத்துக்கொண்டு சாலையில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென ஆசிரியை பாப்பாவின் கையில் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாப்பா திருடன்...திருடன்... என கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை விரட்டிச்சென்று பிடித்தனர்.

    பின்னர் அவர் மேலூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் மதயானை என்ற சூரியபாண்டி, தெற்குபட்டியை சேர்ந்தவர் என தெரியவந்தது.

    Next Story
    ×