என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலூரில் ஆசிரியையிடம் பணம் பறிப்பு - வாலிபர் கைது
Byமாலை மலர்20 Aug 2018 8:36 AM GMT (Updated: 20 Aug 2018 8:36 AM GMT)
மேலூரில் ஆசிரியையிடம் பணம் பறித்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை:
மேலூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுகுமாறன். இவரது மனைவி பாப்பா (வயது47). இவர் பட்டூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
நேற்று வங்கிக்கு சென்ற பாப்பா அங்கு ரூ.15 ஆயிரம் எடுத்துள்ளார். பின்னர் அதனை கைப்பையில் வைத்துக்கொண்டு சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென ஆசிரியை பாப்பாவின் கையில் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாப்பா திருடன்...திருடன்... என கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை விரட்டிச்சென்று பிடித்தனர்.
பின்னர் அவர் மேலூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் மதயானை என்ற சூரியபாண்டி, தெற்குபட்டியை சேர்ந்தவர் என தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X