search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்னசேலம் அருகே தந்தை-மகன் மீது தாக்குதல்- 2 பேர் கைது
    X

    சின்னசேலம் அருகே தந்தை-மகன் மீது தாக்குதல்- 2 பேர் கைது

    சின்னசேலம் அருகே நிலப்பிரச்சினையில் தந்தை-மகன் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சின்னசேலம்:

    சின்னசேலம் அருகே உள்ள பூசப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 34). இவருக்கும் அதேஊரை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. 

    இந்த நிலையில் சம்பவத்தன்று ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான இடத்தில் சுப்பிரமணி கழிப்பறை கட்டும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையறிந்த ராமகிருஷ்ணன், அவரது தந்தை தேவேந்திரன், அக்காள் லட்சுமி ஆகியோர் சுப்பிரமணியிடம் ஏன் எங்களுக்கு சொந்தமான இடத்தில் கழிப்பறை கட்டுகிறீர்கள்? என தட்டிக்கேட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி மற்றும் அவரது ஆதரவாளர்களான தங்கவேல், ராமர், கண்ணன், ராஜா, பெரியம்மாள் ஆகிய 6 பேரும் சேர்ந்து ராமகிருஷ்ணன், தேவேந்திரன், லட்சுமி ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். 

    இது குறித்த புகாரின் பேரில் ராமர் உள்பட 6 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து, சுப்பிரமணி, தங்கவேல் ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×