search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாநகரில் வாலிபர் கொலையில் 6 பேர் கைது
    X

    அண்ணாநகரில் வாலிபர் கொலையில் 6 பேர் கைது

    அண்ணாநகரில் வாலிபர் கொலையில் கைதான 6 பேரிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்பத்தூர்:

    அரும்பாக்கம், அசோக் நகரை சேர்ந்தவர் ஆதித்யன் (வயது 21). நேற்று காலை அவர் அண்ணாநகர் 3-வது அவெனியூவில் உள்ள அமைந்தகரை போலீஸ் நிலையம் அருகே மோட் டார் சைக்கிளில் வந்தார்.

    அப்போது மர்ம கும்பல் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ஆதித்யன் இறந்தார்.

    சம்பவ இடத்தில் ஒருவரை போலீஸ் மடக்கி பிடித்தனர். அவர் அரும்பாக்கத்தை சேர்ந்த சந்தீப்குமார் என்பது தெரிந்தது. ஆதித்யனுடன் ஏற்பட்ட தகராறில் நண்பர்களுடன் சேர்ந்து அவர் தீர்த்துக் கட்டியது விசாரணையில் தெரியவந்தது.

    அவர் கொடுத்த தகவலின் படி கூட்டாளிகளான அமைந்தகரை என்.எஸ்.கே. நகரை சேர்ந்த சபரிநாதன், முருகன், சுருளி என்கிற சிலம்பரசன், அரவிந்தன், ராஜா, கார்த்தி ஆகிய 6 பேரை அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்தார்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று கைதானவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×