search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களக்காடு அருகே பஸ் மோதி கட்டிட தொழிலாளி பலி
    X

    களக்காடு அருகே பஸ் மோதி கட்டிட தொழிலாளி பலி

    களக்காடு அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மலையடிபுதூரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவரும் இவரது நண்பருமான மாவடியை சேர்ந்த குமாரும் (20) நேற்று இரவில் மோட்டார்சைக்கில் களக்காட்டில் இருந்து மாவடிக்கு சென்றனர். சாலைப்புதூர் அடுத்த அண்ணா நகரில் சென்ற போது வள்ளியூரில் இருந்து களக்காடு நோக்கி வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். குமார் படுகாயம் அடைந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த குமாரை மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி களக்காடு இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×