search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடும்ப தகராறில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தற்கொலை
    X

    குடும்ப தகராறில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தற்கொலை

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே குடும்ப தகராறில் மனைவி பேசாததால் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள தெக்குபாளையம் மின்வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 46). இவர் பெரியநாயக்கன் பாளையம் டவுன் தெற்கு மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு இவரது மனைவி ஸ்ரீதேவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக செந்தில்குமாரிடம், ஸ்ரீதேவி பேசாமல் இருந்தார்.

    மனைவி பேசாததால் மனவேதனை அடைந்த செந்தில்குமார் வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×