search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்பாடியில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற போதை வாலிபர்
    X

    காட்பாடியில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற போதை வாலிபர்

    காட்பாடியில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற போதை வாலிபர், காலி மதுபாட்டிலை வீசி சி.சி.டி.வி. கேமராவை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    காட்பாடி ரங்காலயா திருமண மண்டபம் அருகே இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்றிரவு ஒரு வாலிபர் மதுபோதையில் தள்ளாடியபடி ஏ.டி.எம். மையத்திற்கு வந்தார். அவர் ஏ.டி.எம். மையம் முன்பு கையில் காலி மதுபாட்டிலை வைத்துக் கொண்டு ரகளை செய்தார்.

    போதை வாலிபரின் எல்லை மீறிய அட்டகாசம், ஏ.டி.எம். மையத்தின் முன்பு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

    இதை கவனித்த அந்த வாலிபர், மதுபாட்டிலை கேமராவை மீது வீசி உடைக்க முயன்றார். இதில் கேமரா சேதமடைந்தது.

    பின்னர், ஏ.டி.எம். மையத்தில் புகுந்த வாலிபர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் மீண்டும் தள்ளாடி கொண்டு அங்கிருந்து சாவகாசமாக தப்பிச்சென்றார்.

    இக்காட்சிகள் முழுமையாக, சேதமடைந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், போதை வாலிபரின் உருவம் தெள்ளத்தெளிவாக இல்லை. அவர் யார்? என்பதை அடையாளம் காணுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதுப்பற்றி, வங்கி சார்பில் விருதம்பட்டு போலீசில் இன்று புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து, ஏ.டி.எம். மையம் இருக்கும் பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், அலுவலகங்களில் உள்ள மற்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வாலிபரை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    Next Story
    ×