என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும் - ரெங்கநாதன் வலியுறுத்தல்
மன்னார்குடி:
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் சார்பில் அமைதி பேரணி மற்றும் புகழுஞ்சலி கூட்டம் நேற்று மாலை நடந்தது.
மன்னார்குடி நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய அமைதி பேரணி மேலராஜ வீதி வழியாக பெரியார் சிலை அருகே சென்று முடிவடைந்தது. அங்கு நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்தில் தி,மு.க., திராவிடர் கழகம், அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, ம.தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினர் , வர்த்தக சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர், லாரி உரிமையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண் டனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி நீர்பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி ரெங்கநாதன் பேசும் போது கூறியதாவது:-
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திருவாரூரில் அமைக்காமல் அருகே உள்ள விளமல் என்ற கிராமத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அமைத்தார். மேலும் அங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், நீதித்துறை, கல்வித்துறை, விளையாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் கொண்ட பெருந்திட்ட வளாகத்தை இந்தியாவிலேயே முன்மாதிரியாக உருவாக்கினார்.
சொந்த மண்ணில் ஆசையாக கருணாநிதி உருவாக்கியுள்ள இந்த வளாகத்தில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும். மேலும் இந்த பெருந்திட்ட வளாகத்துக்கு ‘கலைஞர்’ வளாகம் என பெயர் சூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Karunanidhi #DMK
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்