search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி - நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
    X

    சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி - நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

    சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #IndependenceDay #IndependenceDaySecurity #Intelligence
    சென்னை:

    நாடு முழுவதும் வரும் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இதேபோல் அந்தந்த மாநில தலைநகரங்களில் சுதந்திர தின விழாக்கள் கோலாகலமாக நடைபெற உள்ளன. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் சுதந்திர தின விழா நடைபெறும் இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவு 12 மணி முதல் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்படுள்ளது. பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும் 22-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    இதற்கிடையே சென்னை ராஜாஜி சாலையில் இன்று சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதேபோல் நாளை மற்றும் 13-ம் தேதியிலும் ஒத்திகை நடைபெற உள்ளது. #IndependenceDay #IndependenceDaySecurity #Intelligence
    Next Story
    ×