என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விநாயகர் சதுர்த்தி விழா - தஞ்சையில் 108 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை
Byமாலை மலர்7 Aug 2018 11:24 AM GMT (Updated: 7 Aug 2018 11:24 AM GMT)
தஞ்சையில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட முழுவதும் 108 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
மேலும் விநாயகர் சதுர்த்தி அன்று தங்கள் பகுதிகளில் முக்கிய இடங்களில் பெரிய அளவில் உள்ள விநாயகர் சிலைகளை வைத்து வணங்குவதற்காக பல்வேறு இந்து அமைப்பினர் அதற்கான பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரன் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தஞ்சையில் 108 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து விமரிசையாக ஊர்வலம் நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்காக 9 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தஞ்சை மாநகர் மாவட்டத்தில் உள்ள 51 வார்டுகளிலும் கிளை கமிட்டி அமைக்க வேண்டும். கல்லூரிகளில் இந்து இளைஞர் முன்னணி அமைக்க வேண்டும். சிலை கடத்தல் வழக்குகளில் நேர்மையாக செயல்பட்ட ஐ.ஜி.பொன்மாணிக்க வேலை இடம் மாற்றம் செய்ய கூடாது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X