search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே மரத்தில் கார் மோதி வாலிபர் பலி
    X

    ஆண்டிப்பட்டி அருகே மரத்தில் கார் மோதி வாலிபர் பலி

    ஆண்டிப்பட்டி அருகே சாலையில் சென்ற கார் மரத்தின் மீது மோதியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆண்டிப்பட்டி:

    தேனியிலிருந்து மதுரைக்கு ஒரு காரில் தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த சுரேஷ் (38), செக்கானூரணி கரடிக்கல்லை சேர்ந்த முத்து (22), அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் (28), சுதாகர் (23) ஆகியோர் பயணம் செய்தனர்.

    இந்த கார் ஆண்டிப்பட்டியை கடந்து மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செல்லும் போது கார் டிரைவர் முத்துவின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகிலுள்ள பாலத்தை இடித்து, வேப்ப மரத்தில் பலமாக மோதி உருக்குலைந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான போலீசார் சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பலத்த காயமடைந்த மற்ற 3 பேரையும் போலீசார் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×