search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் - விருதுநகர் மாவட்டத்துக்கு 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை
    X

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் - விருதுநகர் மாவட்டத்துக்கு 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்துக்கு வருகிற 13-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்துக்கு வருகிற 13-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம் வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ளது.

    தேரோட்ட விழாவில் விருதுநகர் அனைத்து துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வசதியாக வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

    இந்த விடுமுறையை ஈடுபட்டும் வகையில் வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. 13-ந்தேதி அன்று மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்பு நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×