search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நொய்யல் அருகே வியாபாரியை பாட்டிலால் குத்தியவர் கைது
    X

    நொய்யல் அருகே வியாபாரியை பாட்டிலால் குத்தியவர் கைது

    நொய்யல் அருகே வியாபாரியை பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrestcase
    வேலாயுதம்பாளையம்:

    நொய்யல் அருகே தவுட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 60), நவாப்பழ வியாபாரி. இவர் அய்யம்பாளையம் பேருந்து நிலையம் அருகே வழக்கம் போல் நாவல் பழங்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நபர் அவரிடம் நவாப்பழங்களை வாங்கியுள்ளார்.

    அதற்கானை விலைபேரத்தில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் அருகில் கிடந்தபாட்டிலை உடைத்து, லட்சுமணன் முகத்தில் குத்தினார். இதில் அவரின் தாடை கிழிந்தது ரத்தம் கொட்டியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாட்டில்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட தோட்டக்குறிச்சியை சேர்ந்த குட்டி என்ற கார்த்திக்கேயனை கைது செய்தனர்.
    Next Story
    ×