search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி- குணசேகரன் எம்.எல்.ஏ.,தொடங்கி வைத்தார்
    X

    திருப்பூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி- குணசேகரன் எம்.எல்.ஏ.,தொடங்கி வைத்தார்

    திருப்பூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை குணசேகரன் எம்.எல்.ஏ.,தொடங்கி வைத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஓ.எம்.எஸ்., மருத்துவமனை மற்றும் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.

    பேரணியை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தொடங்கி வைத்து சைக்கிளில் பேரணியாக சென்றார்.

    இதில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பேரணி சந்தைப்பேட்டை, ஏ.பி.டி., ரோடு, நடராஜ் தியேட்டர் ரோடு, ரெயில் நிலையம் வழியாக ஊத்துக்குளி ரோடு ரெட்டைக்கண் பாலம் அருகில் உள்ள ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்க அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தது.

    இந்த நிகழ்ச்சியில் ஓ.எம்.எஸ். மருத்துவமனை நிறுவனர் ரவிச்சந்திரன், எலும்பு முறிவு நிபுணர் அருள்ஜோதி, ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ராமலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். #Tamilnews

    Next Story
    ×