search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அய்யலூரில் அதிரடி சோதனை- 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்
    X

    அய்யலூரில் அதிரடி சோதனை- 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

    அய்யலூர் பகுதியில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    வடமதுரை:

    பிளாஸ்டிக் பொருட்களினால் அதிக பாதிப்பு ஏற்படுவதால் அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் துணிப்பைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் சில வியாபாரிகள் லாப நோக்கத்துக்காக பிளாஸ்டிக் பை, கப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. இது குறித்து அய்யலூர் பேரூராட்சியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நேற்று வார ஆட்டுச்சந்தை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர்.

    இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    அய்யலூர் பேரூராட்சி செயல் அலுவலர் முகமது யூசூப் தலைமையில் ஊழியர்கள் சந்தை மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சுமார் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் அபராதம், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் எச்சரித்து சென்றனர். #tamilnews
    Next Story
    ×