search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரணம்: எய்ம்ஸ் டாக்டர்களுக்கு சம்மன்
    X

    ஜெயலலிதா மரணம்: எய்ம்ஸ் டாக்டர்களுக்கு சம்மன்

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் எய்ம்ஸ் டாக்டர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission
    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

    இந்த விசாரணை கமி‌ஷனில் முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம்மோகன் ராவ், ஷீலா பாலகிருஷ்ணன், ஜெயலலிதா உறவினர்கள், உதவியாளர்கள், சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், அரசு டாக்டர்கள் உள்பட பலர் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தனர்.

    இந்த நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் டாக்டர்களுக்கு விசாரணை ஆணையம் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது.



    ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எய்ம்ஸ் டாக்டர்கள் கைலாணி, அஞ்சன் டிரிகா, நிதிஷ்நாயக், நிகில் தண்டன் ஆகியோர் ஆலோசனை வழங்கி உள்ளனர். அவர்கள் 3 முறை அப்பல்லோ மருத்துவமனை வந்தனர்.

    எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியாவின் மெயிலுக்கு இந்த சம்மனை விசாரணை ஆணையம் அனுப்பி உள்ளது. ஆனால் இந்த சம்மனுக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதே போல ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஆலோசனை வழங்கிய லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலேவுக்கு சம்மன் அனுப்ப விசாரணை கமி‌ஷன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission

    Next Story
    ×