என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கூடலூர் அருகே வாலிபரிடம் செல்போனை பறித்த கும்பல்
தேனி:
கேரள மாநிலம் குமுளி அருகில் உள்ள அட்டப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது35). இவர் கூடலூர் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக வந்தார்.
அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு மீண்டும் பஸ் ஏறி ஊருக்கு சென்றார். பஸ்சில் வாந்தி எடுக்கவே அவரை பயணிகள் கீழே இறக்கி விட்டனர். போதையில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த அய்யப்பனை 2 வாலிபர்கள் அழைத்துக்கொண்டு வேறு இடத்தில் தூங்குமாறு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவரிடம் இருந்த செல்போனையும் பறித்துக்கொண்டு சென்று விட்டனர்.
போதை தெளிந்தபிறகு அய்யப்பன் தனது செல்போன் திருடு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து குமுளி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் லோயர்கேம்ப் கடை வீதி தெருவை சேர்ந்த முத்துக்குமார் (23), ராமராஜ் (26) ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்