search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gudalur youth cell phone snatch"

    கூடலூர் அருகே போதையில் இருந்த வாலிபரிடம் செல்போனை பறித்த நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    கேரள மாநிலம் குமுளி அருகில் உள்ள அட்டப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது35). இவர் கூடலூர் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக வந்தார்.

    அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு மீண்டும் பஸ் ஏறி ஊருக்கு சென்றார். பஸ்சில் வாந்தி எடுக்கவே அவரை பயணிகள் கீழே இறக்கி விட்டனர். போதையில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த அய்யப்பனை 2 வாலிபர்கள் அழைத்துக்கொண்டு வேறு இடத்தில் தூங்குமாறு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவரிடம் இருந்த செல்போனையும் பறித்துக்கொண்டு சென்று விட்டனர்.

    போதை தெளிந்தபிறகு அய்யப்பன் தனது செல்போன் திருடு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து குமுளி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் லோயர்கேம்ப் கடை வீதி தெருவை சேர்ந்த முத்துக்குமார் (23), ராமராஜ் (26) ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

    ×