என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராசிபுரம் அருகே மின்னல் தாக்கியதில் 10 வீடுகளில் டி.வி.க்கள் சேதம்
Byமாலை மலர்1 Aug 2018 5:07 PM GMT (Updated: 1 Aug 2018 5:07 PM GMT)
ராசிபுரம் அருகே, மின்னல் தாக்கியதில் 10-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் டி.வி.க்கள் சேதம் அடைந்தன. மேலும் ஆசிரியர் வீட்டின் தண்ணீர் தொட்டியில் விரிசல் ஏற்பட்டது.
ராசிபுரம்:
ராசிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. ராசிபுரம் அருகே உள்ள சில கிராமங்களிலும் மழை பெய்தது. இதன் காரணமாக சில பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டது. இந்த நிலையில் இரவு 7.45 மணியளவில் ராசிபுரம் வி.நகர்.-18 பகுதியில் உள்ள ஆசிரியர் செல்வராஜூ என்பவரது வீட்டில் மின்னல் தாக்கியது.
இதில் அவரது வீட்டின் மீது உள்ள தண்ணீர் தொட்டி ஓடுகள், சிமெண்ட் தளங்கள் வெடித்து சிதறின. தண்ணீர் தொட்டியில் விரிசலும் ஏற்பட்டது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள், கம்ப்யூட்டர், மின்வாரிய சுவிட்ச் பாக்சுகள், மின்விசிறி, டி.வி. ஆகியவையம் சேதம் அடைந்தன. தண்ணீர் தொட்டி மீது மின்னல் போது தீபிளம்பு காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அதேபோல் வி.நகர்.-18 பகுதியில் எலக்ட்ரீசியன் நடராஜன், நெசவு தொழில் செய்துவரும் ரவி, திலகராஜ் உள்பட 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் டி.வி.க்கள் சேதம் அடைந்தன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ராசிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. ராசிபுரம் அருகே உள்ள சில கிராமங்களிலும் மழை பெய்தது. இதன் காரணமாக சில பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டது. இந்த நிலையில் இரவு 7.45 மணியளவில் ராசிபுரம் வி.நகர்.-18 பகுதியில் உள்ள ஆசிரியர் செல்வராஜூ என்பவரது வீட்டில் மின்னல் தாக்கியது.
இதில் அவரது வீட்டின் மீது உள்ள தண்ணீர் தொட்டி ஓடுகள், சிமெண்ட் தளங்கள் வெடித்து சிதறின. தண்ணீர் தொட்டியில் விரிசலும் ஏற்பட்டது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள், கம்ப்யூட்டர், மின்வாரிய சுவிட்ச் பாக்சுகள், மின்விசிறி, டி.வி. ஆகியவையம் சேதம் அடைந்தன. தண்ணீர் தொட்டி மீது மின்னல் போது தீபிளம்பு காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அதேபோல் வி.நகர்.-18 பகுதியில் எலக்ட்ரீசியன் நடராஜன், நெசவு தொழில் செய்துவரும் ரவி, திலகராஜ் உள்பட 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் டி.வி.க்கள் சேதம் அடைந்தன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X