என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கந்துவட்டி கொடுமைக்கு தாய்-மகன் தற்கொலை
Byமாலை மலர்31 July 2018 10:12 AM GMT (Updated: 31 July 2018 10:12 AM GMT)
திண்டுக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் தாய்-மகன் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது68) விவசாயி. இவரது மனைவி சரோஜா (65). இவர்களுக்கு மனோகரன் (41) என்ற மகன் உள்ளார்.
இவர் வெள்ளமடத்துப்பட்டியை சேர்ந்த நாகராஜ், ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த கோபி, சின்னத்துரை ஆகியோரிடம் கடன் வாங்கி இருந்தார்.
தான் வாங்கிய கடனை சிறிது சிறிதாக திரும்ப செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த தொகைக்கு கூடுதல் வட்டி கேட்டு 3 பேரும் மிரட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த மனோகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மனோகரன் இறந்தபிறகும் சின்னச்சாமி மற்றும் அவரது மனைவியிடம் கடன் தொகையை தருமாறு 3 பேரும் மிரட்டி வந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சரோஜா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சின்னச்சாமி கன்னிவாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கந்து வட்டி கொடுமை சட்டத்தின்கீழ், நாகராஜ், கோபி, சின்னத்துரை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். #tamilnews
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது68) விவசாயி. இவரது மனைவி சரோஜா (65). இவர்களுக்கு மனோகரன் (41) என்ற மகன் உள்ளார்.
இவர் வெள்ளமடத்துப்பட்டியை சேர்ந்த நாகராஜ், ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த கோபி, சின்னத்துரை ஆகியோரிடம் கடன் வாங்கி இருந்தார்.
தான் வாங்கிய கடனை சிறிது சிறிதாக திரும்ப செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த தொகைக்கு கூடுதல் வட்டி கேட்டு 3 பேரும் மிரட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த மனோகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மனோகரன் இறந்தபிறகும் சின்னச்சாமி மற்றும் அவரது மனைவியிடம் கடன் தொகையை தருமாறு 3 பேரும் மிரட்டி வந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சரோஜா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சின்னச்சாமி கன்னிவாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கந்து வட்டி கொடுமை சட்டத்தின்கீழ், நாகராஜ், கோபி, சின்னத்துரை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X