search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல்லில் பெண் தீ குளித்து தற்கொலை முயற்சி
    X

    நாமக்கல்லில் பெண் தீ குளித்து தற்கொலை முயற்சி

    நாமக்கல் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரின் மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நாமக்கல்:

    நாமக்கல் செல்லப்பா காலனியை சேர்ந்தவர் முருகேசன், லாரி டிரைவர். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முருகேசன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு வெளியூருக்கு சென்று விட்டார். குழந்தைகளும் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் லட்சுமி வீட்டில் தனியாக இருந்த போது மண்எண்ணை ஊற்றி தீ குளித்தார். வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து, அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் என்ன காரணத்திற்காக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×