search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலாயுதம்பாளையம் அருகே காவிரி ஆற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி
    X

    வேலாயுதம்பாளையம் அருகே காவிரி ஆற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி

    வேலாயுதம்பாளையம் அருகே மறவாபாளையம் காவிரி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி வாலிபர் இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    சின்னதாராபுரம் அருகே நடுப்பாளையத்தைசேர்ந்தவர் ராஜகுமாரன்(வயது 24). இவர் கரூரில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று காலை ராஜகுமாரன் பஸ்சில் வேலாயுதம்பாளையம் அருகே மறவாபாளையம் வந்தார்.

    அங்குள்ள காவிரி ஆற்றில் இறங்கி அக்கரையில் உள்ள கருப்பம்பாளையத்தில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு செல்ல முயன்றார்.

    அப்போது ஆற்று தண்ணீரின் வேகத்தில் ராஜகுமாரன் அடித்து செல்லப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறவாபாளையம் காவிரி ஆற்றில் ராஜ குமாரனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் கட்டிபாளையம் அருகே ராஜகுமாரன் உடல் கரை ஒதுங்கியது. இது குறித்து வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்
    Next Story
    ×