search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமத்திவேலூர் அருகே பள்ளி மாணவியிடம் நூதன திருட்டு
    X

    பரமத்திவேலூர் அருகே பள்ளி மாணவியிடம் நூதன திருட்டு

    பரமத்திவேலூர் அருகே பள்ளி மாணவியிடம் நூதன முறையில் சைக்கிள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Theftcase

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ரம்யா என்ற மாணவியிடம் சைக்கிள் நூதன முறையில் திருடப்பட்டது. நேற்று முன்தினம் வழக்கம்போல் காலையில் பள்ளிக்குச் சென்றார். அப்போது பள்ளி வளாகத்தில் டிப்டாப் ஆசாமி ஒருவர் அமர்ந்திருந்தார்.

    அப்போது அங்கு வந்த மாணவிகளிடம் நான் பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறேன். அவசர வேலையாக வெளியில் செல்வதாகக் கூறி அங்கிருந்த மாணவி ரம்யாவிடம் புது சைக்கிளை வாங்கி கொண்டு சென்றார். மதியம் வரை திரும்பி வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த மாணவி பின்னர் அங்கிருந்து சக மாணவிகளிடம் தெரிவித்தும் ஆசிரியரிடம் கூறினார். பின்னர் விசாரித்தபோது அப்படி ஒரு நபர் இங்கு பணிபுரியவில்லை என்று தெரியவந்தது.

    மாணவியின் பெற்றோர்கள் பரமத்தி வேலூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். பரமத்தி வேலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பள்ளி மாணவிகளிடமும் அப்பகுதி பெற்றோர்களிடமும் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.

    Next Story
    ×