என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குளிர்சாதன பெட்டி வாங்கி ரூ.37 லட்சம் மோசடி - பெண் உள்பட 2 பேர் கைது
போரூர்:
நெசப்பாக்கம் கிழக்கு வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த் குமார். இவர் நூகன் ஏர்கான்ஸ் என்கிற பெயரில் குளிர் சாதனப் பெட்டி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
இவரிடம் கிண்டி எம்.கே.என் சாலையில் ஸ்கை லக்சரி இண்டியா சர்வீசஸ் என்கிற பெயரில் அலுவலகம் நடத்தி வந்த சக்தி முருகன் கடந்த 2017-ம் ஆண்டு முதல் குளிர்சாதனப் பெட்டி வாங்கி வந்தார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதம் வரையில் மொத்தம் 107 குளிர்சாதனப் பெட்டிகளை பிரசாந்த் குமார் நிறுவனத்தில் இருந்து சக்தி முருகன் வாங்கினார்.
இதன் மதிப்பு சுமார் ரூ.37லட்சம். பிரசாந்த் குமாருக்கு தொடர்ந்து பணம் தராமல் ஏமாற்றி வந்தார்.
இந்த நிலையில் திடீரென தலைமறைவானார். இது குறித்து பிரசாந்த் குமார் கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார்.
அசோக் நகர் உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெய ராஜ் மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதையடுத்து சக்தி முருகனின் மனைவி பூர்ணிமா மற்றும் சக்தி முருகனின் சகோதரர் ஹரிகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சக்திமுருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #arrestcase
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்