என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோவில் திருவிழா
Byமாலை மலர்24 July 2018 1:30 PM GMT (Updated: 24 July 2018 1:30 PM GMT)
ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோவில் திருவிழா வருகிற 29-ந் தேதி இரவு நடக்கிறது.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகேயுள்ள மலையாம்பட்டி கிராமத்தில் உள்ள ஆலமரத்தடியில் மலையாள தெய்வம் ஸ்ரீ பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கட்டிடம் மற்றும் கோபுரம் எதுவும் இல்லை. ஆலமரத்தடியில் சாமி சிலைகள் மட்டுமே உள்ளன. இக்கோவில் திருவிழா வருகிற 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.
பெண்கள் கலந்து கொள்வதில்லை. விழாவில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற 150-க்கும் மேற்பட்ட கிடாக்களை பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்த உள்ளனர். பலியிடப்பட்ட ஆட்டு இறைச்சியை பொங்கலுடன் பக்தர்களுக்கு வழங்குவார்கள்.
இந்த சமபந்தி விருந்தில் மலையாம்பட்டி, ராசிபுரம், புதுப்பட்டி, வடுகம், சீராப்பள்ளி, பட்டணம், நாமகிரிபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அனைவருக்கும் இறைச்சியுடன் சமபந்தி விருந்து வழங்கப்படும் என்றும் விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மக்கர்த்தாக்கள் சுப்பிரமணியம், ஆனந்த், சுப்பிரமணி மற்றும் விழாக் குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
ராசிபுரம் அருகேயுள்ள மலையாம்பட்டி கிராமத்தில் உள்ள ஆலமரத்தடியில் மலையாள தெய்வம் ஸ்ரீ பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கட்டிடம் மற்றும் கோபுரம் எதுவும் இல்லை. ஆலமரத்தடியில் சாமி சிலைகள் மட்டுமே உள்ளன. இக்கோவில் திருவிழா வருகிற 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.
பெண்கள் கலந்து கொள்வதில்லை. விழாவில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற 150-க்கும் மேற்பட்ட கிடாக்களை பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்த உள்ளனர். பலியிடப்பட்ட ஆட்டு இறைச்சியை பொங்கலுடன் பக்தர்களுக்கு வழங்குவார்கள்.
இந்த சமபந்தி விருந்தில் மலையாம்பட்டி, ராசிபுரம், புதுப்பட்டி, வடுகம், சீராப்பள்ளி, பட்டணம், நாமகிரிபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அனைவருக்கும் இறைச்சியுடன் சமபந்தி விருந்து வழங்கப்படும் என்றும் விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மக்கர்த்தாக்கள் சுப்பிரமணியம், ஆனந்த், சுப்பிரமணி மற்றும் விழாக் குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X