search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூரமங்கலம் அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை- பணம் கொள்ளை
    X

    சூரமங்கலம் அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை- பணம் கொள்ளை

    சூரமங்கலம் அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார் (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்றார். அவரது மனைவி வளர்மதி நேற்று வீட்டை பூட்டி விட்டு ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டார்.

    இன்று காலை திரும்பி வந்து வீட்டில் பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.25ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

    வீட்டிற்குள் நேற்று இரவு கொள்ளையர்கள் புகுந்து கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இந்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். #Robberycase

    Next Story
    ×