search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுமதியின்றி கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: டிரைவர் கைது
    X

    அனுமதியின்றி கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: டிரைவர் கைது

    ஜெயங்கொண்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் தினேஷ் குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தா. அப்போது அவ்வழியாக கடலூரிலிருந்து உடையார்பாளையம் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி விசாரித்ததில்  அதில் அரசு அனுமதியின்றி 4 யூனிட்  கூழாங்கற்கள் ஏற்றி வந்தது  தெரியவந்தது. 

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் லாரி ஓட்டுநர் கீழகுமார மங்கலம் சுந்தர ராஜன் (35) என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றார்.
    Next Story
    ×