search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களக்காட்டில் தொழிலாளி தற்கொலை
    X

    களக்காட்டில் தொழிலாளி தற்கொலை

    களக்காட்டில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள துவரைகுளத்தை சேர்ந்தவர் கோவில்ராஜ் (வயது 40). கூலி தொழிலாளி. இவரது மனைவி சியாமளா (38). கோவில்ராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கோவில்ராஜ் குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த கோவில்ராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்த களக்காடு போலீசார் தற்கொலை செய்த கோவில்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×