என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் வாலிபர் கொலை - கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை
Byமாலை மலர்17 July 2018 11:56 AM GMT (Updated: 17 July 2018 11:56 AM GMT)
திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியரை கொன்ற கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 3 தனிப்படை அமைத்துள்ளனர்.
திருப்பூர்:
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரமோத்குமார் (வயது 21). இவர் திருப்பூர் அடுத்த வஞ்சிபாளையம் அருகில் உள்ள ஹாலோபிளாக் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
மர்ம நபர்கள் இவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பிரமோத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை செய்யப்பட்டபோது பிரமோத் குமாருடன் வெளியில் சென்ற சக ஊழியர்கள் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் தப்பிச் சென்ற 2 மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் பார்வையிட்டனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக கமிஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரமோத்குமார் (வயது 21). இவர் திருப்பூர் அடுத்த வஞ்சிபாளையம் அருகில் உள்ள ஹாலோபிளாக் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
மர்ம நபர்கள் இவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பிரமோத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை செய்யப்பட்டபோது பிரமோத் குமாருடன் வெளியில் சென்ற சக ஊழியர்கள் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் தப்பிச் சென்ற 2 மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் பார்வையிட்டனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக கமிஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X